பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிச்சயமாக ஏற்க முடியாது - கனிமொழி
பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிச்சயமாக ஏற்க முடியாது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உங்களுக்கு எதிரான குற்றங்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை நாம் கண்டிக்க வேண்டும். இந்த சமூகம் இந்த விஷயங்களை அந்த பெண் மீது பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும். முதலமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள். விரைவிலே ஒரு அழுத்தமான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என முழு முயற்சியோடு ஈடுபட வேண்டுமென தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கண்டனம் தெரிவிக்கலாம், நடவடிக்கை எடுத்ததற்கு எதற்கு கண்டனம்?
தேர்தலுக்கு முன்னால் அவசர அவசரமாக SIR-ஐ கொண்டு வர வேண்டிய அவசியம் கிடையாது.. தேர்தல் ஆணையத்தை பயன்படுத்திக் கொண்டு பல வாக்காளர்களை பல பிரச்சினைகளை வாக்காளர்களுடைய உரிமைகளை பறிக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. SIR ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சி. சமீபத்தில் நடந்த பிரச்சனைகளை எல்லாம் கணக்கெடுத்து கொண்டு அதற்கு நெறிப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு எல்லாருடைய கருத்துக்களும் கேட்கப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படுகிறது. பீகாரில் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம், எத்தனை பேருடைய வாக்குரிமை பறிக்கப்பட்டு இருக்கிறது என்பதை கண்கூடாக பார்த்திருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் மகாராஷ்டிராவாக இருக்கட்டும், ஹரியானாவாக இருக்கட்டும் சமீபத்தில் கூட ராகுல் காந்தி அளகத்து இருக்கிற பத்திரிகையாளர் சந்திப்பிலே மக்களுடைய வாக்குரிமை எவ்வாறு பறிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார்” என்றார்.


