மீனவர்கள் மீதான தாக்குதல்- கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம்

 
மீனவர்கள் மீதான தாக்குதல்- கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் மீனவர்கள் மீதான தாக்குதல்- கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம்

மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கத் தவறிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தி.மு.க. எம்.பி கனிமொழி தலைமையில் ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவகிராமத்தைச் சேர்ந்த மீனவர்களை இளைஞர் கடற்படை கடந்த மாதம் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தது. மீனவர் செந்தமிழ்  குண்டடிப்பட்டு யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்ற மீனவர்களை சிறையில் அடைத்து படகை இயக்கிய மீனவருக்கு 40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூடு மற்றும் கைது சம்பவத்தை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தோம் காரைக்கால் மீனவர்கள் இன்று ஏழாவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காரைக்காலில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆயிரத்திற்கும் ​மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் மீனவர்கள்  ஊர்வலமாக சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


 
இதேபோல் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுக்க தவறியதாக மத்திய அரசை கண்டித்து கனிமொழி எம்.பி., தலைமையில் திமுகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்பு கொடியை கையில் ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.