வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பங்காக இருக்கும் - கனிமொழி
தூத்துக்குடியில் அமையவுள்ள மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பங்காக இருக்கும் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
இது தொடர்பாக கனிமொழி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று தூத்துக்குடியில், வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் மின் வாகன உற்பத்தி ஆலைக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிகழ்வில் பங்கேற்றேன். நம் தூத்துக்குடியில், முதற்கட்டமாக ரூ. 4000 கோடி மதிப்பீட்டில் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அமையவிருக்கும் இந்த ஆலை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காக இருக்கும்.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டேன்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 25, 2024
வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு மாற்று வீடுகளுக்கான ஆணை, மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள், மகளிர் சுயஉதவிக்… pic.twitter.com/CihkFQgdci
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டேன். வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு மாற்று வீடுகளுக்கான ஆணை, மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் கடனுதவி, பயிர்கள் சேதமடைந்த விவசாயிகள் மற்றும் மீன்பிடி படகுகள் சேதமடைந்த மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.