திமுக எம்.பி. ஞானதிரவியம் மீது போலீசார் வழக்குப்பதிவு

 
gt

நெல்லை திமுக எம்.பி. ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
tn

நெல்லை சிஎஸ்ஐ திருச்சபை திருமண்டலத்தில் இருதரப்புக்கு இடையே தொடர்ந்து பிரச்சினை நீடித்து வரும் நிலையில் ஒரு தரப்புக்கு ஆதரவாக திமுக எம்.பி. ஞான திரவியம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஞான திரவியம் மறை மாவட்ட  ஆயரின் உத்தரவின் பெயரில் தாளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  இதன் காரணமாக ஞான திரவியத்தின் ஆதரவாளர்கள் மத போதகரை தாக்கியதாக தெரிகிறது. இந்த குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில் இது குறித்து விளக்கம் கேட்டு திமுக எம்.பி. ஞான திரவியத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் குறித்து ஏழு நாட்களுக்குள் தலைமை கழகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ விளக்கம் அளிக்கா விட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

arivalayam

இந்நிலையில் நெல்லை திமுக எம்.பி. ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கிறிஸ்துவ திருச்சபை உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்த நிலையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஞான திரவியம்,  சிஎஸ்ஐ திருச்சபை பள்ளியில் பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் உள்ளிட்ட 33 பேரின் மீது பாளையங்கோட்டை போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.