அண்ணாமலை மீது வழக்கு தொடர போகிறேன் - டி.ஆர்.பாலு அதிரடி!

 
tr baalu

அண்ணாமலை மீது வருகிற 08ம் தேதி வழக்கு தொடரவுள்ளதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். 

சென்னை தாம்பரம் அருகே பம்மலில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:  அண்ணாமலை என்னைப் பற்றி கூறிய அவதூறு செய்தி ஒரு வாரத்திற்கு முன்பு வந்தது. அவதூறுகள் குறித்து நான் அவருக்கு நோட்டீஸ் அளித்தேன். தற்போது வரை அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. 48 மணி நேரம் அவருக்கு கொடுத்தேன். அதுவும் முடிந்து விட்டது.  21 கம்பெனிகள் என்னுடையது என கூறி இருக்கிறார்கள். ஆனால் 3 நிறுவனங்களில் மட்டுமே பங்குதாரராக உள்ளேன். எனக்கு சொந்தமாக எந்த நிறுவனமும் கிடையாது. 

எந்த கம்பெனியிலும் நான் டைரக்டர் கிடையாது. தேர்தலில் நிற்கும் போதே சொத்து கணக்குகள் அனைத்தும் கொடுத்திருக்கிறேன் அதை பார்த்துக் கொள்ளலாம். எனக்கு எது சொந்தம் எது சொந்தமில்லை என்பது மக்களுக்கு தெரியும். ஒரு வன்மம் நோக்கத்தோடு செய்திருக்கிறார். அதற்காக நான் வழக்கு தொடராமல் இருக்க முடியாது. வருகிற 8-ந் தேதி அவர் மீது வழக்கு தொடர போகிறேன். அதற்கு பிறகு சட்டபூர்வமாக சிவில் வழக்கு தொடருவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.