நாடாளுமன்ற சம்பவம் தொடர்பாக அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் - திருச்சி சிவா

 
trichy siva

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என திமுக எம்.பி. திருச்சி சிவா  கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி அமளியில் ஈடுபட்டதாக கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன் உள்ளிட்ட 15 எம்.பி.க்கள் ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, டி.என்.பிரதாபன், டீன் குரியகோஸ், எஸ்.ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் ஹைபி ஈடன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மேலும் 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்கக் கோரி முழக்கமிட்ட 15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்துக்குள் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்திற்குள் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

opposition

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என திமுக எம்.பி. திருச்சி சிவா  கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும்.  தாக்குதல் நடத்தியவர்களுக்கு பரிந்துரை கடிதம் வழங்கிய பாஜக எம்.பி. மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இவ்வாறு கூறினார்.