“பிப்ரவரியில் தேர்தல் அறிவிப்புகள் வந்துவிடும்! பாஜக, அதிமுகவுக்கு எதிராக இதனை உடனே செய்யுங்கள்”- நிர்வாகிகளுக்கு செந்தில் பாலாஜி அறிவுரை

 
செந்தில் பாலாஜி செந்தில் பாலாஜி

ஜனவரி மாதம் தேர்தல் களம் காணும் மாதம், டிசம்பர் மாதத்திற்குள் வடக்கு அவிநாசி தொகுதிகளில் ஆய்வினை முடிக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி அறிவுரை வழங்கினார்.

கரூரோடு சுருங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி அதிகாரம்! விடாது துரத்தும்  அமலாக்கத்துறை! அடுத்தது என்ன? | Senthil Balaji was relieved from the  biggest responsibility of ...

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து திருப்பூர் வடக்கு மற்றும் அவிநாசி சட்டமன்ற தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. இதில் மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். திருப்பூர் வடக்கு தொகுதி மற்றும் அவிநாசி தொகுதிகளில் திமுக வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும், பொதுமக்களிடம் பூத் கமிட்டி ஏஜென்ட்டுகள் எவ்வாறு அணுக வேண்டும். அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்களை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தினார். மேலும் தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.

குறிப்பாக வரும் டிசம்பர் மாதத்திற்குள் இரண்டு தொகுதிகளிலும் முழுமையாக ஆய்வு செய்து, எந்தெந்த வாக்கு சாவடிகளில் நாம் பலவீனமாக இருக்கிறோம் என்பதை கண்டறிந்து அங்கு வாக்கு வங்கியை உயர்த்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை செய்ய வேண்டும். அதிமுக பாஜக எந்தெந்த வாக்கு சாவடிகளில் வாக்கு  அதிகம் வைத்துள்ளது, அங்கு நம்முடைய வாக்குகளை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக இந்த பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும் அடுத்து ஜனவரி தேர்தல் களம் காணும் மாதம் என்றும் பிப்ரவரி மாதத்தில் தேர்தல் அறிவிப்புகள் வந்துவிடும் என்பதால் பணிகளை விரைந்து செயல்படுத்தி முடிக்க வேண்டும் என நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.