புயல் பாதிப்பு - தி.மு.க. இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு தேதி மாற்றம்

 
arivalayam

மிக்ஜாம் புயலாம் ஏற்பட்ட பாதிப்புகளால் தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் திமுக இளைஞர் அணி சார்பில் வருகிற 17ம் தேதி சேலத்தில் நடைபெற இருந்த 2வது மாநில மாநாட்டின் தேதி மாற்றப்பட்டுள்ளது. 

சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை, வெள்ளத்தால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கோடிக்கனக்கான பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன.  

dmk

இந்த நிலையில், மிக்ஜாம் புயலாம் ஏற்பட்ட பாதிப்புகளால் தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் திமுக இளைஞர் அணி சார்பில் வருகிற 17ம் தேதி சேலத்தில் நடைபெற இருந்த 2வது மாநில மாநாட்டின் தேதி மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தி.மு.க. இளைஞர் அணி  இரண்டாவது மாநில மாநாடு  தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2023 டிசம்பர் 24 – ஞாயிறு அன்று நடைபெறும். மிக்ஜாம்” புயலால் பெய்த பெருமழை - வெள்ளம் காரணமாக, சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, மழை - வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், வருகிற 17-12-2023 அன்று சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட “தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு” தேதி மாற்றப்பட்டு, வருகிற 24-12-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.