கல்லூரி மாணவியை ஏமாற்றி திருமணம்- திமுக இளைஞரணி நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கல்லூரி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதுடன், அவரை 20 பேருக்கு இரையாக்க முயற்சித்த திமுக நிர்வாகியான தெய்வ செயல் என்பவர் மீது கல்லூரி மாணவி ப்ரீத்தி என்பவர் கொடுத்த புகாரை அடுத்து அரக்கோணம் திமுக மத்திய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வந்த தெய்வ செயல் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளர் தெய்வா (எ) தெய்வச்செயல் (த/பெ ரத்தினம், 150/1, 172, பெரிய தெரு, காவனூர் குடியிருப்பு (அ), அரக்கோணம்) அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, ம.கவியரசு (த/பெ மனுவேல், 199, சி.எஸ்.ஐ. பள்ளிக்கூடத் தெரு, காவனூர், அரக்கோணம்) என்பவர், அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் இவருடன் இணைந்து கழகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


