பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்கக்கூடாது - வைரமுத்து ட்வீட்

 
vairamuthu

திராவிடக் கட்சிகளின் நடவடிக்கையால்தான் சாதி பிரச்னை இந்த அளவுக்கு குறைந்துள்ளது என்று வைரமுத்து தெரிவித்துள்ளது.

tn

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களை சந்தித்த பேட்டியில், "பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்க கூடாது. அடித்தட்டு மக்களின் மனதில் சாதி பாகுபாடுகளை விதைக்க கூடாது. சாதிகளை ஒழிக்கப் பிறந்த | மன மருத்துவ நிலையங்களான கல்விக் கூடங்களிலேயே, சாதி தலைதூக்குவதை பொறுத்துக் |கொண்டிருக்க முடியாது. சாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் மட்டும் கருதினால் போதும். அதற்கு பெருமையோ இழிவுவோ கொடுக்க வேண்டாம். 

tn

சாதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். சாதி என்பது அடையாளம் என்ற நிலையில் இருந்தால்போதும்; அதற்குமேல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். திராவிட கட்சிகளின் நடவடிக்கையால்தான் சாதி பிரச்னை இந்த அளவுக்கு குறைந்துள்ளது. சாதியை வலியுறுத்தி படங்கள் எடுக்கப்படுவதில்லை. அப்படி எடுத்தால் வணிக ரீதியாக வெற்றி பெறாது" என்றார்.