கிரகணம் முடிந்ததும் எப்படி வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் தெரியுமா?
பொதுவாக சூரிய கிரகண காலத்தில் எந்த வேலையும் செய்யக்கூடாது. ஆனால், கிரகணம் முடிந்தவுடன் சில வேலைகளை செய்யவேண்டும். அவை, கிரகணத்தால் ஏற்படும் மோசமான விளைவுகளிலிருந்து பாதுகாக்கும்.
பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஒரே கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி இருந்தால், சூரிய ஒளி சந்திரனை அடைய முடியாது, அது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது, சூரியனின் ஒளி பூமியை அடையாத நிலை ஏற்படும். அது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.
சூரிய கிரகணமாக இருந்தாலும் சரி, சந்திர கிரகணமாக இருந்தாலும் சரி, ஆன்மீகம் மற்றும் ஜோதிடத்தில் இரண்டுமே அசுபமானவைகளாக கருதப்படுகின்றன. கிரகண காலத்தில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கிறது என்று நம்பப்படுகிறது.
கிரகணம் முடிந்ததும், நீங்கள் வீடை முழுவதும் கழுவிவிட்டு, அதன் பின்னர் கங்கை (வைகை, காவிரி போன்ற புண்ணிய நதி நீரை பயன்படுத்தலாம்) தண்ணீரை தெளிக்க வேண்டும். கற்பூரம் கங்கை நீரில் கலக்கும்போது, கிரகணத்தினால் வீட்டில் ஏற்பட்ட மோசமான விஷயங்களையும், விளைவுகளை நீக்கிவிட்டு, எதிர்மறை ஆற்றலும் நீக்கும் பொருட்டு இப்படிச் செய்யப்படுகிறது.
கிரகணம் முடிந்த பின்னர் வீட்டை சுத்தம் செய்யும் நீரில் எலுமிச்சை மற்றும் கடல் உப்பு என கூறப்படும் கல் உப்பு சிறிது கலந்து அந்த நீரைப் பயன்படுத்தி துடைப்பது நல்லது. இதனால் வீட்டில் இருக்கும் நட்சுக்கள் நீங்கும்.
அதோடு வீட்டில் நல்ல மனமும், குளிர்ச்சியும் உண்டாகும். அதன் பின்னர் வீட்டில் தீப, தூபம் காட்டுவது நல்லது.
கிரகணம் முடிந்த பின்னர் நன்றாக தலை குளித்துவிட்டு, பஞ்சகவ்வியம் எனப்படும் பால், தயிர், நெய், பசுவின் கோமியம், சாணம் ஆகியவை கலந்து, வீட்டில் இருக்கும் அறைகளின் எல்லா மூலைகளிலும், படுக்கை, புல்வெளிகளில் தெளிக்கவும். இந்த கலவை உங்களின் வீட்டில் இருக்கும் அனைத்து தீய சக்திகளையும் நீக்கும் தன்மை கொண்ட அற்புதமானது.
ஒரு சிவப்பு துணியில் 100 கிராம் அரிசி, 100 கிராம் தயிர் ஆகியவை கலந்து அதில் ஒரு தேங்காய் வைத்து, உங்கள் வீட்டின் ஈசான்ய மூலையிருந்து ஆரம்பித்து வீட்டு முழுவதும் சுற்றவும். பின்னர் அந்த சிவப்பு துணியில் உள்ள பொருட்களை ஓடும் நீரில் விட்டு விடுங்கள்.
மல்லிகை எண்ணெய்
சூரிய கிரகணம் முடிந்ததும், மல்லிகை எண்ணெய் உபயோகித்து விளக்கு வைக்கவும். இன்று முழுவதும் இந்த தீபம் சுடவிடுவது நல்லது. அதோடு தீப தூபம் காட்டுவது நல்லது.


