"நெப்போலியன் மகனின் உடல்நலம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"- மருத்துவர் டேனியல் ராஜா

 
s s

நடிகர் நெப்போலியன் மகன் மற்றும் அவரது குடும்பம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது நெல்லை எஸ்பி அலுவலகத்தில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Nepolian
முன்னாள் மத்திய அமைச்சரும் பிரபல நடிகருமான நெப்போலியன்  மகன் தனுசுக்கும், நெல்லை மாவட்டம் மூலக்கரை பட்டியைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக திருமண நடந்தது. திருமண நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் ஏராளமான பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் தனுஷின் உடல்நிலை குறித்தும், அவரது குடும்ப வாழ்க்கை குறித்தும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் குறிப்பாக யூடியூப் சேனல்களில் சிலர் அவதூறு பரப்பி வந்துள்ளனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட நெப்போலியனின் குடும்பத்தினர் தனது மயோபதி  மருத்துவமனை நிர்வாகம் மூலம் இன்று காலை நெல்லை எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர். அப்போது நெப்போலியனின் அண்ணன் கிருபாகரனும் உடன் வந்திருந்தார்.

நெப்போலியன் மகன் மற்றும் அவரது குடும்ப வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பி சிலம்பரசனிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வீரவநல்லூர் மயோபதி மருத்துவமனையின், இயன்முறை தலைமை மருத்துவர் டேனியல் ராஜா, “நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுஷ் குறித்து தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் யூடியூப் சேனல்கள் அவர்களின் லைக்குகளுக்காக இப்படி செய்கின்றனர். இதுபோன்ற யூடியூப்  சேனல்களை முடக்க வேண்டும். இது போன்ற செயல்களில் ஈடுபடும் யூடியூபர்களை கைது செய்ய வேண்டும். ஆன்லைனில் ஏற்கனவே புகார் அளித்துள்ளோம். தற்பொழுது நேரில் புகார் அளிக்க வந்துள்ளோம். தவறான செய்திகளை பரப்பு யூடியூப் அவர்களை கைது செய்ய வேண்டும்” என்றார்.