"காவலர்களுக்கு உணவுப்படியை வழங்காமல் தாமதப்படுத்துவது அநீதி" - அண்ணாமலை

 
annamalai mkstalin

 பொதுமக்களின் பாதுகாவலர்களான காவல்துறையினரை வஞ்சிக்க வேண்டாம் என்று  அண்ணாமலை வலியறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தாம்பரம் மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில், காவலர்களுக்கு, கடந்த ஜனவரி மாதம் முதல் வரை உணவுப் படி வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நாள் ஒன்றுக்கு 300 வீதம், ஒவ்வொரு மாதமும் 26 நாட்களுக்கு ரூபாய் 7800 என்ற முறையில் ஒவ்வொரு காவலருக்கும் சுமார் 45 ஆயிரம் ரூபாய் வரை உணவுப் படி வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளார்கள்.

Annamalai

ஊழல் செய்து சிறையில் இருக்கும் அமைச்சருக்கு மாத ஊதியத்தை மறுக்கவோ, தாமதப்படுத்தவோ செய்கிறதா இந்த ஊழல் திமுக அரசு? தன்னலமின்றி, நேரம் காலம் நோக்காமல், பொதுமக்களைப் பாதுகாக்க ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் காவல்துறையினருக்கு, ஜனவரி மாதம் முதல், ஐந்து மாதம் இருபது நாட்களுக்கான உணவுப்படியை வழங்காமல் மறுப்பதும், ஜூன் 20 ஆம் தேதியிலிருந்து வழங்குவதாகச் சொன்ன உணவுப்படியை வழங்காமல் தாமதப்படுத்துவதும் அவர்களுக்கு இந்த அரசு செய்யும் அநீதியாகும்.  


உடனடியாக, ஆவடி மற்றும் தாம்பரம் ஆணையகக் காவலர்களுக்கான உணவுப் படியை, ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு மொத்தமாக வழங்க வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாவலர்களான காவல்துறையினரை வஞ்சிக்க வேண்டாம் என்றும், தமிழக பாஜக  சார்பாக திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.