#BREAKING தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல - முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!!

 
mk stalin

1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Bihar amitsha

தலைநகர் டெல்லியில் அலுவல் மொழிக்கான பார்லிமென்ட் குழுவின் 38வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவரும்,  மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர் , உலகளவில் இந்தி மற்றும் நாட்டின் அனைத்து மொழிகளையும் பிரதமர் மோடி பிரபலப்படுத்தி இருக்கிறார். உள்ளூர் மொழிகளுக்கு இந்தி போட்டி இல்லை .அனைத்து மொழிகளையும் ஊக்குவிப்பதன் வாயிலாகவே நாடு அங்கீகாரம் பெறும் . மொழிகள் நாட்டை ஒருங்கிணைக்க பாடுபட்டுள்ளன. விரைவில் பொறியியல்,  மருத்துவ படிப்புகளை 10  மொழிகளில் துவங்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது என்றார்.

M.K.Stalin

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சாதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல!



தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம். இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கமும், கர்நாடகமும் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மாண்புமிகு அமித் ஷா அவர்கள் உணர வேண்டும்.1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்!" என்று குறிப்பிட்டுள்ளார்.