மீண்டும் அரங்கேறிய வரதட்சணை கொடுமை..! பெண் ஐடி ஊழியருக்கு நேர்ந்த கதி..!

 
1 1

பெங்களூரை சேர்ந்தவர் பிரவீன். இவர் ஐடி ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஐடி ஊழியரான ஷில்பாவிற்கும் பிரவீனிற்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இருவரும் ஒரே துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் வரதட்சணையாக 35 லட்சம் ரூபாய் செலவில் திருமணத்தைப் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி ஷில்பாவிற்கு 150 சவரன் நகையை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர்.பிரவீனும் ஷில்பாவும் தங்களுடைய திருமண வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதற்கு தற்பொழுது வயது இரண்டு ஆகும்.

இந்த நிலையில் கடந்த ஓராண்டிற்கு முன்பு பிரவீன் தனது ஐடி பதவியை இழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் பாணி பூரி கடை ஒன்றை ஆரம்பித்து வேலை செய்து வந்துள்ளார். மேலும் தனது கடையை மேம்படுத்த மனைவி ஷில்பாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.குறிப்பாக ஷில்பாவின் பெற்றோரிடம் சுமார் 10 லட்சம் ரூபாய் கேட்டு வாங்கி வரத் தொல்லை கொடுத்துள்ளார். இந்தச் சூழலில் ஷில்பா இரண்டாவது முறையாகக் கர்ப்பம் தரித்துள்ளார். ஆனாலும், பிரவீனும் அவரது தாயாரும் ஷில்பாவை மேலும் வரதட்சணை கொண்டு வர வற்புறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஷில்பாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து ஷில்பா தற்கொலை செய்து கொண்டதாக கணவர் பிரவீன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சந்தேகம் அடைந்த ஷில்பாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

காவல்துறையிடம் அளித்த புகாரில், வரதட்சணை கேட்டு தனது மகள் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாக தாய் தெரிவித்துள்ளார். பிரவீனை பிரிந்து செல்லுமாறும், அதனால் அவர் மறுமணம் செய்து கொண்டு புதிய மணப்பெண்ணிடமிருந்து அதிக வரதட்சணை பெற முடியும் என்று அவரது மாமியார் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

பிரவீனுடன் தனது மகளின் திருமணத்திற்கு ரூ.30 லட்சம் செலவிட்டதாகக் கூறினார். அவர்கள் 150 கிராம் தங்கத்தையும் வரதட்சணையாக அளித்தனர். ஆனாலும், பிரவீனும் அவரது தாயாரும் ஷில்பாவை மேலும் வரதட்சணை கொண்டு வர வற்புறுத்தினர். ஒரு காலத்தில் பிரவீன் ஷில்பாவிடம் "வரதட்சணையாக" ரூ.5 லட்சம் கேட்டதாகவும், அது எப்படியோ அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டதாகவும் ஷில்பாவின் தாயார் சாரதா குற்றம் சாட்டினார்.

பிரவீனின் தாய் ஷில்பாவை மனரீதியாக சித்திரவதை செய்ததாக சாரதா கூறினார். இரண்டாவது குழந்தையைப் பெறவிருந்த ஷில்பா, சித்திரவதைகளைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டதாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஷில்பாவின் கணவர் பிரவீன் மற்றும் அவரது தாயார் சாந்தவ்வாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நிறைமாத கர்ப்பிணியான மென் பொறியாளர் ஷில்பா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.