சென்னையில் இந்த இடங்களில் இன்றிரவு முதல் நாளை காலை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் : குடிநீர் வாரியம் அறிவிப்பு!!

 
water

சென்னையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

water

வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதனால்  மழைநீர் வடிகால் அமைக்கும் பணியானது  ஈவேரா பெரியார் நெடுஞ்சாலையில் பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகில்  நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரைசென்னை வேப்பேரி, பெரியமேடு, பார்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் எழும்பூர் ஆகிய 5 இடங்களிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

water 1

நெடுஞ்சாலை துறையால்  மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறும் நிலையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீரை சேமித்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவசர தேவைக்காக  8144930905 என்ற எண்ணை தொடர்பு கொண்டு லாரிகள் மூலம் தண்ணீரை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.