'போதையற்ற தமிழ்நாடு' : ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார் நடிகர் சூர்யா!

 
 'போதையற்ற தமிழ்நாடு' : ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார் நடிகர் சூர்யா!

போதையற்ற தமிழ்நாடு என்பதை வலியுறுத்தி  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னெடுத்துள்ள  கையெழுத்து இயக்கத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். போதை பழக்கத்துக்கு எதிரான 1 கோடி கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவாக நடிகர் சூர்யா கையெழுத்திட்டுள்ளார்.   

தமிழ்நாட்டில் மதுப்பழக்கம், கஞ்சா உள்ளிட போதைப்பொருட்களின்  பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக இளைஞர்களின் வாழ்க்கை, எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.  அத்துடன் போதைப்பழக்கத்தால் குற்றச்செயல்களும் அதிகரித்து வருகின்றன.  இதனைத் தடுக்க தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.  இந்த நிலையில்  தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்களை போதைக் கலாச்சாரத்தில் இருந்து விடுவிக்க,  அனைத்து பகுதிகளிலும் தாராளமாய் கிடைக்கும் மது, கஞ்சா உள்ளிட்ட பொருட்களை தடை செய்ய வேண்டும் என்பது   உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மக்களிடம் 1 கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை  முன்னெடுத்துள்ளனர்.

drugs

 கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா இதனை தொடங்கி வைத்தார். இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இந்த கையெழுத்து இயக்கம் தொடர்பாக பிரச்சார கூட்டங்கள் நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுதப்பட்டன.  இந்த போதையற்ற தமிழ்நாடு  இயக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில்  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், முக்கிய பிரபலங்கள் கையெழுத்திட்டு வருகின்றனர்.  அந்தவகையில்  நடிகர் சூர்யா இன்று (ஜூலை16 ) போதை பழக்கத்துக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவாக கையெழுத்திட்டார்.