"தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும்" - வானிலை ஆய்வு மையம் தகவல்!!

 
ttn

இன்று முதல் 26ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 27  மற்றும் 28ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் .ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 

rain

இன்று மற்றும் நாளை உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக காணப்படும். அத்துடன் தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இன்றும் , நாளையும் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

heavy rain

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனி மூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29  மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே  நிலவியது.  அத்துடன் மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்படவில்லை.