திடீர் உடல்நலக்குறைவு காரணமாக துரை தயாநிதி மருத்துவமனையில் அனுமதி!

 
durai dhayanidhi

மு.க.அழகிரியின் மகனும், திரைப்பட தயாரிப்பாளருமான துரை தயாநிதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரியின் மகன் துரை நயாநிதி அழகிரி. இவர் பிரபல தொழில் அதிபராகவும், சினிமா திரைப்பட தயாரிப்பாளராகவும் விளங்கி வருகிறார். இவர் தமிழில் நடிகர் விஜய் நடித்த மங்காத்தா, தமிழ் படம் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில், துரை தயாநிதிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் திடீர் உடல்நலக்குறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக பக்கவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் மயக்கம் ஏற்பட்டு விழுந்துள்ள்ளார். மருத்துவர்கள் அவருக்கு ரத்தக் குழாயில் ஏற்பட்ட 6 அடைப்புகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். 

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை நயாநிதியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் துரை தயாநிதிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். துரை தயாநிதிக்கு உடலில் மூளை வாத பிரச்சனை இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.