ஆளுநர் மூக்கறுப்பு- திமுகவுக்கு வைகோ பாராட்டு

 
vaiko

தமிழ்நாட்டிற்கு வந்து தமிழை அழிக்க நினைத்தவர் இந்தியால் தமிழை அழிக்க முடியாது என்று தெரிந்து கொண்டு  தற்போது மூக்கறுப்பட்டு போய் உள்ளதாக ஆளுநரை  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார்.

vaiko ttn

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதிமுக மாணவரணி மாநில செயலாளர் பால சசிகுமார் திவ்யா திருமணத்தினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை கழகச் செயலாளர் துறை வைகோ ஆகியோர் தலைமையேற்று முன் நின்று நடத்தி வைத்தனர். அதனைத் தொடர்ந்து மணமக்களை வாழ்த்தினார். அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய வைகோ, "தாழ்ந்து பேசுவதில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை மிஞ்ச முடியாது, இன்று ஒரு பேச்சு பேசுபவர்  நாளை அதை மறுத்து பேசுகிறார்.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சொன்னதை போல் அரண்மனை பிறவிக்கு வாயடக்கம் தேவை, தமிழ்நாட்டிற்கு வந்து தமிழை அழித்து விடலாம் என்று நினைத்து பேச ஆரம்பித்தவர் இந்தியால் தமிழை ஒன்றும் செய்ய முடியாத என்று தெரிந்து கொண்டு தற்போது தமிழக ஆளுநர் ஆர்என் ரவி  மூக்கறுப்பட்டு  போய் உள்ளார்.

தமிழக முதல்வர் சொல்வதை கேட்கும் நிலைமைக்கு தமிழக ஆளுநர் வந்துவிட்டார். அதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தினமும் ஏதோ ஒன்றை பேசுகிறார் யாரைப் பற்றி தான் பேசுகிறார் என்று தெரியவில்லை , அவராலும் தற்போது வரை எதையும் நிரூபிக்க முடியவில்லை என்றும்,

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் திமுக அரசு, திராவிட மாடல் அரசு வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது, தமிழ்நாடு முதலமைச்சர் நாள்தோறும்  திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்,அதில் வெற்றியும் காண்கிறார். வரும் மதிமுக பொதுக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் குறித்து அறிவிக்கும்" என தெரிவித்தார்.