துரைமுருகன் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் - AITUC

 
DMK

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் துரைமுருகன் அரசுப் பேருந்துகளில் பெண்களை நடத்துனர்கள் தரக்குறைவாக நடத்தினால் அவர்கள் வேலையை பறித்து வீட்டுக்கு அனுப்பி விடுவேன் என்று தெரிவித்தார். அத்துடன் அரசு பேருந்துகளில் பெண்களை நடத்துனர்கள் இனி தரைகுறைவாக நடத்தினால் அடியுங்கள் . அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் தங்களை வேண்டா வெறுப்பாக ஏற்றுவதாக பெண்கள் சிலர் புகார் கூறியதால் அமைச்சர் துரைமுருகன் இவ்வாறு கூறினார். ஆனால்  இதற்கு போக்குவரத்து தொழிலாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

DMK

இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக நடத்துனர்கள் பற்றி பேசியதை அமைச்சர் துரைமுருகன் திரும்பப் பெற வேண்டும் என்று AITUC தெரிவித்துள்ளது. பெண் பயணிகளிடம் பஸ் ஊழியர்கள் தரக்குறைவாக நடந்து கொள்வதாக கூறுவதை முழுமையாக மறுக்கிறோம். மக்கள் நலன் கருதி பணிபுரிந்த ஊழியர்கள் அமைச்சரின் பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.