EB பில் கம்மியா வரணுமா? இதை மட்டும் செய்யுங்க!

 
1

பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் இரவு முழுவதும் ஏசியை ஆன் செய்தவாறே தூங்குகின்றனர். இதனால் மின்சார கட்டணம் அதிகமாக வரும். அதனால் மின்சார கட்டணத்தைக் குறைக்கும் சில வழிகளை இங்கே குறிப்பிடுகிறோம்.

ஏசியை ஒருபோதும் குறைந்த வெப்பநிலையில் வைக்கக்கூடாது. ஏசியை 16 அல்லது 18 டிகிரியில் வைத்திருப்பது நல்ல குளிர்ச்சியை தருவதாக மக்கள் கருதுகின்றனர்.ஆனால், பீரோ ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்சி (BEE) படி, மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை 24 டிகிரி. அதனால் வெப்பநிலையை 24 ஆக வைத்திருங்கள், இது நிறைய மின்சாரத்தை சேமிக்கும்.மேலும் ஏசியில் ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை அதிகரிக்கும் போதும், 6 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும் என பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

சம்மருக்கு முந்தைய குளிர் காலத்தில் நீங்கள் ஏசியை உபயோகிக்காமல் விட்டுவிட்டு, பிறகு சர்வீஸ் செய்யாமல் பயன்படுத்தினால், அதனால் மின் கட்டணம் அதிகமாக வரலாம். ஏனெனில், நீண்ட நேரம் ஏசி நிறுத்தப்படுவதால், அதில் தூசி மற்றும் துகள்கள் அடைத்திருக்கும். அத்தகைய சூழ்நிலையில், குளிர்ச்சியை தர மெஷின் நிறைய வேலை செய்ய வேண்டி வரும். அதனால் மறக்காமல் சர்வீஸ் செய்யுங்கள்.

ஏசியை ஆன் செய்யும் முன் அந்த அறையின் கதவு மற்றும் ஜன்னலை மூடவும். அதனால் அனல் காற்று உள்ளே வராது, குளிர் காற்று வெளியே போகாது. இல்லையெனில் உங்கள் ஏசி அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். மேலும் மின் கட்டணமும் அதிகமாகும்.

இப்போதெல்லாம் பெரும்பாலான ஏசிகள் ஸ்லீப் மோட் அம்சத்துடன் வருகின்றன. அவை தானாகவே வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை சரிசெய்துக் கொள்ளும். அதனால் 36 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும்.

நீங்கள் AC-யுடன் மின்விசிறியைப் பயன்படுத்தும்போது, ​​அது அறையின் ஒவ்வொரு மூலைக்கும் AC காற்றை கொண்டுச் செல்லும். இதனால் அறை முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும். இதனுடன், ஏசியின் வெப்பநிலையைக் குறைக்க வேண்டிய தேவையும் ஏற்படாமல், மின்சாரத்தை சேமிக்கலாம்.