அமைச்சர் பொன்முடியின் வாகனங்களில் சோதனை
சென்னையில் அமைச்சர் பொன்முடியின் காருக்குள் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
உயர்கல்வித்துறை அமைச்சரும், திமுக துணை பொதுச்செயலாளருமான பொன்முடியின் சென்னை மற்றும் விழுப்புரம் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றன.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடர்புடைய ஏழு இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் சென்னை சைதாப்பேட்டை, விழுப்புரம் சண்முகபுரத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா அறக்கட்டளைக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலும், அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்புடன் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைமைச் செயலகத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது அமைச்சர் பொன்மொழி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு தலைமைச் செயலகத்தில் உள்ள பொன்முடியின் அலுவலகத்திற்கு வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் பொன்முடியின் காரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.