டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை

 
ED Raid

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மேற்பார்வையாளர் முத்து பாலன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய நிலையில், சோதனையின் முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளார். இந்த நிலையில், கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்க  துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தனலட்சுமி மார்பில்ஸ் நிறுவனம் உள்ளிட்டம் மூன்று இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர். அதேபோல கரூரில் மீண்டும் அமலாக்கத் துறையினர் சோதனையை தொடங்கியுள்ளனர்.  அமைச்சர் செந்தில் பாலாஜி குடும்பத்தினர் கரூரில் கட்டிவரும் பங்களா கட்டுமான பணியில் தொடர்புள்ள அருண் அசோசியேட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், டாஸ்மார் மேற்பார்வையாளர்  முத்து பாலன் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மேற்பார்வையாளர் முத்து பாலன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நடந்து வரும் சோதனை தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.