#BREAKING வானகரம் வந்தடைந்த பழனிசாமி - அதிமுக பொதுக்குழுவில் உறுப்பினர்கள் வாக்குவாதம்!!

 
tn

அதிமுக பொதுக்குழுவில் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

admk office

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.  சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.ஏற்கனவே ஓபிஎஸ் அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் பகுதிக்கு வந்தடைந்த நிலையில் தற்போது  எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்துள்ளார். ஈபிஎஸ்-ஐ வரவேற்று அவருக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள் முழக்கமிட்டு வருகிறார்கள்.

tn
இந்நிலையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரு தரப்பு உறுப்பினர்கள் வாக்குவாதத்தால் அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  பொதுக்குழு உறுப்பினர்கள் அமைதி காக்க அதிமுக மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஓபிஎஸ்-க்கு எதிராக தொடர்ந்து கோஷம் எழுப்பி வரும் பொதுக்குழு உறுப்பினர்களால்  அங்கு பதற்றம் உண்டாகியுள்ளது.