அன்பு சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் - ஈபிஎஸ்

 
tn

தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வாகியுள்ள நிலையில் ஈபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

tn

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், நேற்று திருவேற்காடு - GPN பேலஸ் திருமண மண்டபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.


இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்றிருக்கும் அன்பு சகோதரி திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், தங்களின் கட்சிப்பணி  சிறக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.