மொஹரம் பண்டிகை - ஈபிஎஸ் வாழ்த்து!!

 
ep

மொஹரம் பண்டிகையையொட்டி எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்தினை இஸ்லாமிய பெருமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

tn
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் தொடக்க மாதமாக சொல்லப்படும் மொஹரம் மாதத்தின் 10ம் நாளான இன்று புனித நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதை மொஹரம் திருநாளாக சிலர் துக்க நாளாகவும், சிலர் கொண்டாட்டமாகவும் கடைபிடிக்கின்றனர். இந்த விழாவை பெரும்பாலும் இஸ்லாமியர்கள் மட்டுமே கொண்டாடும் நிலையில் தமிழக மற்றும் புதுச்சேரியில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வருகிற 20ம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் , "இறைவனின் செயலுக்கு நன்றி கூறும் தியாக திருநாளான மொஹரம் தினத்தில்,உலக மக்கள் அனைவரையும் பேணிப் பாதுகாத்து,துயர் நீக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிக் கூறுவதுடன்,உலகில் சமத்துவம் தழைக்கவும், சகோதரத்துவம் மேம்படவும், ஒற்றுமை வலுப்பெறவும், இறைவனை பிராத்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.