"நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக" : ஈபிஎஸ் விமர்சனம்!!

 
tn

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில், அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.

tn

மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை; அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. கட்சிக்கு தலைமையேற்பது தான் வாரிசு அரசியல்; எம்எல்ஏ, எம்.பி. தேர்தலில் போட்டியிடுவது இல்லை . அதிமுகவிற்கு மக்கள் எழுச்சி பெரிய அளவில் உள்ளது.

tn

நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக. திராவிட கட்சிகளால் பயனில்லை என்றால் மாறி மாறி கூட்டணி வைப்பது ஏன்? தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு நிலைப்பாடு எடுக்கிறது பாமக " என்றார். 

tn

தொடர்ந்து பேசிய அவர், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழ்ந்து பேசியது மகிழ்ச்சி; எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கூட அதிமுக தலைவர்களை புகழ்வது மகிழ்ச்சிதான்" என்றார்.