எடப்பாடி பழனிசாமி திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் சாமி தரிசனம்

 
eps

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 

அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டட்திற்கு இன்று வருகை தந்தார். இன்று காலை 7.30 மணி அளவில் அவர் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அவருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன், வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி 3வது மைல், பழைய காயல், முக்கானி, ஆத்தூர், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் என அனைத்து பகுதிகளிலும் அவருக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

eps

இதனை தொடர்ந்து திருச்செந்தூர் வந்தடைந்த எடப்பாடி பழனிசாமி சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சென்றார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சாமி தரிசனம் செய்தார். சுவாமி மூலவர், சண்முகர், சத்ருசம்கார மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களை வழிபட்டார். இதனை தொடர்ந்து அவர் திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு சென்றார்.