தீயசக்தியிடம் சிக்கிய தமிழ்நாட்டை விரைவில் மீட்போம் - எடப்பாடி பழனிசாமி

 
ep ep

தீயசக்தியின் விடியா ஆட்சியில் சிக்கியுள்ள நம் தமிழ்நாட்டை விரைவில் மீட்டு, பாரதியின் கூற்றைப்போல் "வான்புகழ் கொண்ட" தமிழ்நாடாக மீண்டும் மிளிரச் செய்திட உறுதியேற்போம் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 


இந்தியாவில் இருந்து தமிழ்நாடு மொழிவாரியாக பிரிக்கப்பட்ட தினம் நவம்பர் 01. இந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தனி மாநிலமாக அமைய போராடிய தியாகிகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தெக்கணத்திற் சிறந்த திராவிட நல்திருநாடாம் நமக்கான நற்றமிழ்நாடு கிடைத்த நாளான இந்நாளை "தமிழ்நாடு நாள்" என்று எனது தலைமையிலான அம்மாவின் அரசு அறிவித்ததை பெருமிதத்துடன் நினைவுகூர்ந்து, அனைவருக்கும் இனிய #தமிழ்நாடுநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், தீயசக்தியின் விடியா ஆட்சியில் சிக்கியுள்ள நம் தமிழ்நாட்டை விரைவில் மீட்டு, பாரதியின் கூற்றைப்போல் "வான்புகழ் கொண்ட" தமிழ்நாடாக மீண்டும் மிளிரச் செய்திட உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.