எல்லா கேள்விகளுக்கும் சபாநாயகரே பதிலளித்துவிட்டால் அமைச்சர்கள் எதற்கு? - ஈபிஎஸ் கேள்வி

 
eps

எல்லா கேள்விகளுக்கும் சபாநாயகரே பதிலளித்துவிட்டால் அமைச்சர்கள் எதற்கு? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள்  என 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு ஆளுநர் கடந்த 13ஆம் தேதி அதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  இந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தனர்.
 

Assembly

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எல்லா கேள்விகளுக்கும் சபாநாயகரே பதிலளித்துவிட்டால் அமைச்சர்கள் எதற்கு? என சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி 
எழுப்பினார்.  துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும் என என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.