திமுக ஆட்சியில் வேளாண் தொழில் கடுமையாக பாதிப்பு - எடப்பாடி பழனிசாமி பேச்சு!

 
eps

திமுக ஆட்சியில் நெசவு மற்றும் வேளாண் தொழில் செய்பவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக அரசு விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. வேளாண் தொழில் திமுக ஆட்சியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் நெசவு மற்றும் வேளாண் தொழில் செய்பவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் துணிக்கு நியாமான விலை கிடைக்கவில்லை. இதனால் கைத்தறி, விசைத்தறி தொழில் செய்பவர்கள், நலிவடைந்து தறிகளை எடைக்கு போடும் நிலை ஏற்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டு வேளாண்துறை அதிமுக ஆட்சியில் சிறப்பாக இருந்தது. அதிமுக ஆட்சியில் நெசவாளர்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர்.