அண்ணாவின் திருவுருவ படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை!

 
Edappadi

அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை பசுமை வழிச்சாலையில், செவ்வந்தி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். 

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில்,  தமிழக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். சென்னை பசுமை வழிச்சாலையில், செவ்வந்தி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். 


இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திராவிடத்தின் பிதாமகர், சமூகநீதி, மாநில உரிமை,மொழி உரிமை போன்றவற்றிற்காக சமரசமின்றி போராடி தமிழ்நாட்டிற்காக வென்றெடுத்த, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல்சொல்,
தமிழ் இனத்தின் வரலாற்றில் குன்றாப் புகழுடன் என்றும் நிலைத்து நிற்கும்,பேரறிஞர் பெருந்தகை #அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாளில், சென்னை பசுமை வழிச்சாலை, செவ்வந்தி இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கும்,பேரறிஞர் பெருந்தகையாரின் திருவுருவ சிலைக்கும் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கி பெருமையுற்றேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.