நாளையுடன் ஓயும் தேர்தல் பிரச்சாரம் - விதிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

 
tn tn

மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடையும் நிலையில் தேர்தல் ஆணையமானது விதிமுறைகளை வெளியிட்டது.  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழக மற்றும் புதுச்சேரியில் வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.  இதற்கு இன்னும் ஒரு சில நாட்களை உள்ள நிலையில் நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.

election

 கடந்த சில வாரங்களாக தேர்தல் களம் சூடு பிடித்த நிலையில்  நாளை மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நாள் வரை தேர்தல் விதிகளை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு  வெளியிட்டார்.  வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் ஊடகங்கள் ,பேஸ்புக் ,வாட்ஸ் அப் ,எக்ஸ் வலைத்தளம் போன்ற சமூக வலைத்தளங்கள் என எந்த வகையிலும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யக்கூடாது. நாளை மாலை 6:00 மணிக்கு பிரச்சாரம் முடிந்தவுடன் தொகுதி சாராத வெளியூர் நபர்கள் அந்த தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்,  ஹோட்டல்கள் விடுதிகளில் வெளியூர் நபர்கள் இல்லை என்ற நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

election

 தேர்தல் தொடர்பான கூட்டம் , ஊர்வலம் நடத்தவோ அதில் வேட்பாளர் பங்கேற்கவும் கூடாது.  இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் திரையரங்குகள் வாயிலாக பரப்புரை செய்யக்கூடாது . விதிமுறைகளை மீறுவோருக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.