"கொத்து கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கம்" - திமுக மீது சந்தேகம் : தமிழிசை சௌந்தராஜன் பேட்டி!!

 
Tamilisai

தேர்தல் ஆணையம் கண்காணித்திருக்க வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  

tamilisai
இந்நிலையில் கோவையில்   தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளரும், முன்னாள் ஆளுநருமான  தமிழிசை சௌந்தரராஜன்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் கொத்துக் கொத்தாக வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது பல லட்சம் வாக்குகள் விடுபட்டிருப்பது வேதனை அளிக்கிறது; தேர்தல் ஆணையம் கவனமாக இருந்திருக்கலாம். பல லட்சம் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது; இந்த விவகாரத்தில் திமுக அமைதியாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார். 

முன்னதாக தென்சென்னை - மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை, ஆஸ்டின் நகரில் உள்ள 13-வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த பாஜக வேட்பாளர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார். வாக்குபதிவின் போது,  50 திமுகவினர் புகுந்து, முகவர்களை அடித்து வெளியேற்றிவிட்டு கள்ள ஓட்டுபோட முயற்சித்ததாக புகார் எழுந்துள்ளது.