பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து

 
train

சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி பயணிகளை ஏற்றுக்கொண்டு சென்ற மின்சார ரயில் ஒன்று பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென அந்த ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கின. இதனை சுதாரித்துக்கொண்ட ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனை தொடர்ந்து  உடனடியாக ரயில் தடம் புரண்ட சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள் பெட்டியின் 4 சக்கரங்களையும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உடனடியாக ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் தடம் புரண்ட பெட்டியில் இருந்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை கூறப்படுகிறது. மின்சார ரயில் தடம் புரண்ட சம்பவம் சம்பவம் தொடர்பாக ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை பேசின் பிரிட்ஜ் பணிமனை அருகே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது குறிப்பிடதக்கது.