மின்வாரிய அலுவலகத்தின் 10வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில ஊழியர் பலி

 
death

சென்னை மின்வாரிய அலுவலகத்தில், பணிக்கு சேர்ந்த முதல் நாளிலேயே பத்தாவது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில ஊழியர் உயிரிழந்த சம்பாம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை  அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் கட்டுமான புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சைபுல் ஷேக் என்பவர் இங்கு பணியாற்றி வரும் நிலையில் அவருடன் சேர்ந்து பணியாற்ற தனியார் கட்டுமான பணி வேலை செய்வதற்காக நேற்று மதியம் ஷேக்கின் அண்ணன் குலாம் ரசூல் சென்னை வந்துள்ளார்.மின்வாரிய அலுவலகத்தில் பணி மேற்கொண்டிருந்த போது பத்தாவது மாடியில் இருந்து தவறி  கீழே விழுந்துள்ளார்.

death

அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிந்தாரிப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சம் பிழைப்பதற்காக வேலை தேடி  மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை வந்த வாலிபர் 10வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.