அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்!!
அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் முறைகேடாக வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் .இந்த சூழலில் கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
இந்நிலையில் நவ.30ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.