”புத்தாண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்” : ஈபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக வாழ்த்து....

 
ஓபிஎஸ் இபிஎஸ்


புதிய ஆண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு வாழ்வைத் தொடருவோம் என ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்  கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், “ புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில் தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

புத்தாண்டு 2022

இறைவன் நமக்கு புதியதொரு ஆண்டினை வழங்கியுள்ளார். இந்த புதிய ஆண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு வாழ்வை தொடருவோம்.

 புலரும் புத்தாண்டில்  மக்கள் அனைவரது வாழ்க்கையும் புதுப்பொலிவு பெறச் செய்யட்டும்; புதிய வெற்றிகளையும், சந்தோஷத்தையும் கொண்டு வரட்டும்; பகைமை, வெறுப்பு உள்ளிட்ட தீய விஷயங்கள் அனைத்தும் ஒழிந்து; அன்பு, நட்பு உள்ளிட்ட நல்ல விஷயங்கள் இந்த மண்ணுலகில் பெருகட்டும் என்றும்; மக்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற்றிடவும்; உலக மக்கள் அனைவருக்கும் நோய் நொடியின்றி மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், வாழ்ந்திடவும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா ஆகியோரது நல்லாசியோடு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து, அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறோம் : என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து