அதிமுக முன்னாள் அமைச்சர் சாரோஜாவின் கணவர் மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
அதிமுக முன்னாள் அமைச்சர் உப்பிலியாபுரம் சாரோஜாவின் கணவர் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடார்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் உப்பிலியாபுரம் திருமதி R. சரோஜா அவர்களுடைய கணவர் திரு. P.K. பெருமாள் அவர்கள் உடல்நலக் குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.#AIADMK pic.twitter.com/4gtk0uq1MM
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) August 27, 2023
பாசமிகு கணவரை இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும் அன்புச் சகோதரி திருமதி சரோஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், திரு. பெருமாள் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.