ஈபிஎஸ் எக்ஸ் தளத்தின் முகப்பு பக்கத்தில் "Say No To Drugs & DMK" என்ற வாசகம் இணைப்பு

 
EPS

ஈபிஎஸ் தனது  எக்ஸ் தளத்தின் முகப்பு பக்கத்தில் "Say No To Drugs & DMK" என்ற வாசகத்தை இணைத்துள்ளார்.

eps
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், போதைப்பொருள் மாபியா விவகாரத்தில் திமுகவின் நிர்வாகிகளே ஈடுபடுவதாக செய்திகள் வருகின்ற நிலையில், இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும்,



வருகின்ற மார்ச் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அளவில் கழகத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களை இணைத்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கின்றது. கழகத்தின் தொடர்ச்சியான  போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டங்களின் குறியீடாக,  என்னுடைய  டிவிட்டர் “X” தளத்தின் முகப்பு பக்கத்தில்  "Say No To Drugs & DMK" என்ற வாசகத்தை இன்று இணைக்கிறேன்.

கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை @AIADMKOfficial -ன் போராட்டம் தொடரும்! என்று குறிப்பிட்டுள்ளார்.