திருமாவளவனிடம் ஈபிஎஸ் நலம் விசாரிப்பு

 
tn

காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனிடம் ஈபிஎஸ் நலம் விசாரித்தார்.

thiruma

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் காய்ச்சலின் காரணமாக இரண்டு நாட்கள் அவரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் யாரும் வருகின்ற 30ஆம் தேதி வரை அவரை சந்திக்க நேரில் வர வேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

th

இந்நிலையில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார். நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசியில் நலம் விசாரித்த நிலையில் ஈபிஎஸ் நலம் விசாரித்தார்.