#EPS ஸ்கிரிப்ட்டை மாத்துப்பா.. உதயநிதியை கலாய்த்த இபிஎஸ்!

 
Admk
அதிமுக கூட்டணியின் சார்பாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது.
அந்தப் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதிமுக கூட்டணியின் சார்பாக போட்டியிடும் 40 வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
அதன் பிறகு உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, “எப்போது பார்த்தாலும் உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கல்லை எடுத்துக் கொள்கிறார். அதைத்தான் மூன்று வருடங்களாக காட்டிக்கொண்டிருக்கிறார்.
செங்கல்லை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும். ரோட்டில் காட்டி பிரயோஜனம் இல்லை. விளம்பரத்திற்காக செங்கல்லை காட்டுகிறார்.
ஸ்கிரிப்ட்டை மாத்துப்பா.. கதைய மாத்து. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திமுக எம்.பி.க்கள் என்ன செய்தார்கள்? 38 எம்.பிகள் 5 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்? 3 ஆண்டுகளாக செங்கல்லை காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்” என்று தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.