ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல்

 
thennarasu

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணமடைந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. தினமும் பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடக்கிறது. கடந்த 4-ந் தேதி வரை 5 நாட்களில் 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்ததாக அறிவிக்கப்பட்டது.  6-வது நாளான நேற்று நாம் தமிழர் கட்சி உட்பட 13 பேர் வேட்பு மனுக்களை வழங்கினார்கள். நேற்று வரை மொத்தம் 59 பேர் மனு தாக்கல் செய்து உள்ளார்கள்.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படுகிறது.  

இந்நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றது குறிப்பிடதக்கது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு வருகிற 10-ந் தேதி கடைசி நாளாகும். எனவே அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்