ஈரோடு கிழக்கு தொகுதி : மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்..

 
ஈரோடு கிழக்கு தொகுதி : மாதிரி வாக்குப்பதிவு தொடக்கம்..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்குப்பதிவு பணிகள் நடைபெற்று வருகின்றன.  

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற 27ம் தேதி  இடைத்தேர்தல்  நடைபெறவுள்ளது. மார்ச் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடிபெற்று வருகின்றன.  இதற்காக 238 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதியில்  77 பேர் போட்டியிடும் நிலையில்,  ஒரு வாக்குச் சாவடிக்கு 5 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக 238 வாக்குச் சாவடிகளில் பயன்படுத்த 286 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளனர்.  

vote

வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ள இயந்திரங்களில் ரேண்டம் முறையில் 5 சதவிகிதம் இயந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று  மாதிரி வாக்குப்பதிவு செய்யும் பணி தொடங்கியிருக்கிறது.  இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் நடைபெற்று வரும் இந்த  மாதிரி வாக்குப்பதிவில், ஒவ்வொரு இயந்திரத்திலும் 1,000 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு சரிபார்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.