பெருந்துறையில் தப்பிய குற்றவாளிகள் பிடிபட்டனர்!!

 
tn

கொலை கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க முயன்றபோது  துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பியவர்களை போலீசார் கைது செய்தனர்.

tn

 ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தலைமறைவாக இருந்த கொலையாளிகள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நெல்லை களக்காடு பகுதியில் நடந்த கொலை வழக்கில்  தொடர்புடைய 4 பேர் பெருந்துறை அருகே பதுங்கி இருந்தனர்.  நெல்லை காவல்துறையினர் தேடி வந்த போது குற்றவாளிகள் அரிவாளால் வெட்ட முயற்சி செய்துள்ளனர். இதன் காரணமாக  தற்காப்புக்காக கொலையாளிகள் மீது உதவி ஆய்வாளர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இருப்பினும் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  கொலையாளிகள் தப்பி ஓட்டம் பிடித்தனர். தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடினர். 

gun

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் தப்பிய குற்றவாளிகள் பிடிபட்டனர்.  காயங்களுடன் தப்பிய சுப்ரமணியன், முத்து மணிகண்டன் நெல்லை மாவட்ட எல்லையில் கைது செய்யப்பட்டனர். நெல்லை அரசு மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்புடன் இருவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.