பின்னடைவை சந்தித்தாலும் பாமக, பாஜக கூட்டணியில் இருக்க மாட்டோம் - திருமாவளவன்..

 
திருமாவளவன்

அரசியலில் எத்தனை பின்னடைவுகளை சந்தித்தாலும் பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கூட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை சீர்குலைத்து மாநிலத்தின் முன்னேற்றத்தை பாஜக தடுக்க முயல்வதாக கூறி,  திருமாவளவன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தில் பேசிய திருமா, “பதவியை பார்த்து பல் இழிப்பவன் அல்ல திருமாவளவன், இந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அண்ணன் ஸ்டாலின், நான் தோற்றுவிடக்கூடாது என்பதற்காக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட சொன்னார். தோற்றாலும் பரவாயில்லை தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறேன் என சொன்னவன் நான். பதவிக்கும் ஆசைப்படுகிறவனாக இருந்தால், நீங்கள் சொல்றபடி கேட்கிறேன் அண்ணே என தலைகுனிந்து வந்திருப்பேன்.

அதிமுக-பாமக கூட்டணி முறிந்தது! உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி
 
பாமக, பாஜக இருக்கும் இடத்தில் ஒருபோதும் விசிக இருக்காது. இதுமாதிரி சொல்வதற்கு இந்தியாவில் எந்த அரசியல் கட்சி தலைவருக்காவது தைரியம் இருக்கிறதா? கருணாநிதி எதிர்ப்பிற்கும் ஈழத்தமிழர் பிரச்னைக்கும் சம்பந்தமே கிடையாது. பாஜவுடனான கருத்தியல் யுத்தம் திமுகவிற்கும் பாஜகவிற்கும் அல்ல. அதிமுக அவர்களோடு இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கானதுமல்ல. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் விடுதலை சிறுத்தைகளுக்கும் பாஜகவுக்குமே கருத்தியல் ரீதியான யுத்தம் நடக்கிறது. ஓட ஓட விரட்டியட்டிப்போம்.

பாஜக - விசிக

அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும் பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்க மாட்டோம். அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை திமுக ஒருங்கிணைக்க வேண்டும் என்கிறோம். திமுக கூட்டணியை ஆதரிக்கிறோம்” என்று  திருமாவளவன் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி  தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.