உடல் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும்!!

 
gagan

அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

ym

சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.  குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும்,  அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது.  தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

gagan

இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 6,205 பேர் சிறுநீரகத்துக்காக, 443 பேர் கல்லீரலுக்காக, 75 பேர் இதயத்துக்காக, 62 பேர் நுரையீரலுக்காக, காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 128 பேரின் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு, 733 பேர் பயனடைந்துள்ளனர். அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.