நெல் கொள்முதல் பணிகளை விரைவாக செயல்படுத்துங்கள் : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!!

 
cm stalin

குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும், சிறப்பாகவும் முடிக்க வேண்டும் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் தற்போது தமிழ்நாட்டில் குறுவை பருவ நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெறுவதை கருத்தில் கொண்டு, இது குறித்த பணிகளை ஆய்வு செய்தார்.மேலும் டெல்டா மாவட்டங்களான மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆட்சிப்பணி அலுவலர்களுடன், தொலைபேசியில் தொடர்புகொண்டு தற்போதைய கொள்முதல் பணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.

stalin

குறுவை பருவ நெல் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தற்போது 843 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6ம் தேதி வரையில் 36 ஆயிரத்து 289 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருவதாலும் , கொள்முதல் பணிகள் சிறப்பாக நடப்பதை உறுதி செய்யவும் , தஞ்சாவூர், திருவாரூர் ,மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பணிகளை மேற்பார்வை இடுவதற்காக உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முதல்வர் மு.க. ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார்.

cm mk stalin

இதன்மூலம் குறுவை நெல் கொள்முதல் பணிகளை விரைவாகவும் சிறப்பாகவும் முடிக்கப்பட வேண்டும் என்று கொள்முதல் பணிகள் ஆய்வு கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நெல் கொள்முதலை விரைவில் நடத்தி முடிக்கவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நெல் கொள்முதல் பணிகளை விரைவாக முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.