திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது : பிப்.28க்குள் விண்ணப்பிக்கலாம்..

 
திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது : பிப்.28க்குள் விண்ணப்பிக்கலாம்..


திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெற பிப்ரவரி 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ தமிழக அரசால் 2022-23-ம் ஆண்டுக்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு திருநங்கைகளின் முன்னேற்றத்துக்கு சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழக அரசின் விருதுகள் இணையதளமான ‘awards.tn.gov.in’-ல் வரும் பிப்.28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்விருதுக்கு திருங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக வாழ்க்கையில் முன்னேறி இருந்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது : பிப்.28க்குள் விண்ணப்பிக்கலாம்..

திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன. மேலும், அவர்கள் அளிக்க வேண்டிய கையேட்டில், சுயவிவர குறிப்பு, 2 புகைப்படங்கள், சுயசரிதை, விருதுகள் விவரம், சேவை பற்றிய செயல்முறை விளக்கம், சேவையை பாராட்டி பத்திரிகையில் வந்த செய்தித் தொகுப்பு, சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை உள்ளிட்டவை இடம்பெற்றிருக்க வேண்டும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.